இந்தியா, மே 9 -- 4 ஆண்டுகளில், சரிவில் இருந்து நம்பர்-1 மாநிலமாகி, சாதனை படைத்தோம்; இனி நாம் போகின்ற பாதை சிங்கப் பாதையாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகியவற்றை மேற்கொண்டார். இந்த மாபெரும் விழாவில், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும், திருச்சி மாவட்டத்திற்காக செயல்படுத்தப்பட்ட மெகா திட்டங்களையும் அவர் உணர்ச்சி மிக்க உரையில் விவரித்தார். திராவிட இயக்கத்தின் வெற்றி பயணம் திருச்சியில் இருந்து தொடங்கியதாகவும், ஐந்தாம் ஆண்டு ஆட்சியை இங்கிருந்தே தொடங்குவதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மேலும் படிக...