இந்தியா, மே 24 -- நடப்பு திமுக ஆட்சியில் சம்பாதிக்க இயலாதவர்களுக்கு, அடுத்த ஆட்சியில் சம்பாதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா உறுதி அளித்து உள்ளார்.

மேலும் படிக்க:- தவெக பரிதாபங்கள்: விஜய்யை சந்திக்க முடியாமல் தவிக்கும் ஆதவ் அர்ஜூனா! வெங்கடரமணனை வெளியேற்றும் மூவரணி!

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக மாவட்ட வாரியாக மண்டல பொறுப்பாளர்களை நியமனம் செய்து உள்ளது. இதில் சென்னை மற்றும் சென்னையை சுற்றி உள்ள பகுதிகளுக்கு திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் அமைச்சர் ஆவடி நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி...