இந்தியா, ஏப்ரல் 23 -- சைவ மற்றும் வைணவ சமயங்களின் புனித குறியீடுகளை அமைச்சர் பொன்முடி இழிவு படுத்தி உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்து உள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி "தப்பா நினைச்சுக்காதீங்க மகளிர். ஒரு விலைமாது வீட்டுக்கு ஒருத்தன் போறான். போகும்போது அங்க அந்த அம்மா கேக்குது, 'நீங்க சைவமா வைணவமா?' அப்படின்னு கேக்குது. அவனுக்கு ஒன்னும் புரியல. அவன், 'பணம் எவ்வளவு? அஞ்சு குடு, பத்து கொடு'ன்னு கேட்டான்னா, 'ரைட், என்னடா இங்க வந்துருக்கறோம்? நாம ஒரு விலைமாது வீட்டுக்கு வந்து, சைவமா வைணவமான்னு கேக்குறாங்க' அப்படின்னு கேட்டான். அந்த அம்மா சொல்லிச்சு, சைவம்னா படுத்துக்கிறது, வைணவம்னா நின்னுக்கிறது. நின்னா அஞ்சு, படுத்தா பத்து'ன்னு சொன்னா" என பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல்...