இந்தியா, மே 10 -- இந்திய ராணுவத்திற்கு எதிராகவோ அல்லது இந்திய ஒன்றிய அரசுக்கு எதிராகவோ தவறான கருத்துகளை பதிவிடுவது ஏற்கத்தக்கது அல்ல என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

இந்திய ராணுவத்தின் சமீபத்திய நடவடிக்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முழுமையாக வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஆதரிக்க வேண்டும் என்று கூறினார். அதேவேளையில், இது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போராக மாறிவிடக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் படிக்க:- 'இந்தி தெரியாததால் 10,000 கோடி ரூபாய் இழந்தேன்!' ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் பரபரப்பு பேட்டி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திய ராணுவ நடவடிக்கையை ஆதரித்து சென்னையில் மாலை ...