இந்தியா, மே 10 -- இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் போர் இன்றோ, நாளையோ முடிவடையாது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார்.

கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்த அவர், 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியா அமைதி வழியில் நடவடிக்கை கோரியதையும், 2016 பதான்கோட் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் அதிகாரிகளை இந்தியாவுக்கு அழைத்து விசாரணைக்கு அனுமதித்ததையும், ஆனால் பாகிஸ்தான் அதனை அவமதித்ததையும் குறிப்பிட்டார். ஊரி தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததாகவும், புல்வாமா தாக்குதலுக்கு பாலாகோட்டில் வான்வழித் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்தார். "பாகிஸ்தான் செய்யக்கூடிய எல்லா தவறுகளுக்குமே நம்முடைய பதிலடி என்பது ஒரு முறையும் ஒரு படி மேல மேல போறோம்" என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க:- 'இந்தி தெரியாததால் 10,000 கோடி ரூபா...