இந்தியா, மே 20 -- மதுரை மாவட்டம், வலையங்குளத்தில் மழையின்போது, வீட்டின் முன்பக்க மேற்கூரை இடிந்து விழுந்ததில் பாட்டி-பேரன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம், வலையங்குளத்தில் நேற்றிரவு மழை பெய்திருக்கிறது. இந்த வீட்டில் வசித்து வந்த அம்மா பிள்ளை என்னும் மூதாட்டி, அவரது மருமகள் வெங்கட்டி, வெங்கட்டியின் மகன் சிறுவன் வீரமணி ஆகிய மூவரும் உறங்கிக்கொண்டிருக்கையில், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருக்கின்றனர். அவ்வூரில் இரவு மின் விநியோகம் இல்லாததால், இது குறித்து யாருக்கும் முதலில் தெரிந்து இருக்கவில்லை. அதன்பின் காயமடைந்த மூன்று பேரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக மகளைப் பறிகொடுத்த தாய் பேசுகையில், 'ஒத்தபிள்ளையைத் தானே பெத்துவளர்த்தேன்...