இந்தியா, மே 10 -- இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவும் சூழலில் ஆபரேஷன் சிந்தூர் படத்தை அறிவித்ததற்காக இயக்குநர் உத்தம் மகேஸ்வரி மன்னிப்பு கேட்டுள்ளார். இன்று சனிக்கிழமை காலை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "புகழுக்காகவோ அல்லது பணத்துக்காகவோ இந்தப் படத்தை நான் இயக்க விரும்பவில்லை எனவும் அவர் கூறினார். மேலும், "நமது வீரர்களின் தைரியம், தியாகம் மற்றும் வலிமை" தன்னை நெகிழச் செய்ததாகவும் கூறினார்.

மேலும் படிக்க| 'ஆபரேஷன் சிந்தூர்' பெயரில் படம்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான உடனேயே படக்குழுவை வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்..

ஆபரேஷன் சிந்தூர் பட இயக்குநரின் மன்னிப்பு

இந்தப் படத்தை அறிவிப்பதன் மூலம், "யாரையும் புண்படுத்தவோ அல்லது கோபப்படுத்தவோ நான் விரும்பவில்லை" என்று உத்தம் கூறினார். "சமீபத்தில் இந்திய ராணுவத்தின் வீரதீரச் செயல்களால் ஈர்க்கப்ப...