இந்தியா, ஜூன் 1 -- தவெக கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தவெக தலைவர் விஜய், எடப்பாடி பழனிசாமியிடம் பேசியதாகவும், அதன் பின்னர் ஆதவ் அர்ஜுனா வருத்தம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் உடன் பேசும் போது, எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் விமர்சித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடியை யாரும் நம்பவில்லை என்றும், பாஜக தலைவர் அண்ணாமலை 10 பேரை வைத்து 20% வாக்குகளைப் பெற்றதாகவும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்...