இந்தியா, மே 16 -- நமக்கான காலம் வரும்போது பறக்க ஆரம்பிப்போம், தற்போது கூண்டுக்கிளியாக இருப்போம் என மத்திய அமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் அளித்து உள்ளார்.

திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையின் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்து, அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். மாநிலத்தின் பல பகுதிகளில் நிகழும் குற்ற சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டினார். கொங்கு பகுதியில் வீடு புகுந்து விவசாயிகள் கொல்லப்படுவது, தென் தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் நடைபெறுவது, சென்னையில் கூலிப்படை தாக்குதல்கள் அதிகரிப்பது என பல பிரச்சினைகளை எடுத்துரைத்தார். "தமிழ்நாட்டின் எல்லா ஊர...