இந்தியா, மார்ச் 27 -- என் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்மந்தமாக, நேற்று சிபிசிஐடி போலீசார் 5 பேரை கைது செய்தனர். நேற்று இரவே, அந்த 5 பேருக்கு நீதித்துறை நடுவர் ஜாமின் வழங்கியிருக்கிறார். இந்த விசாரணை சரிவர நடக்குமா என்கிற சந்தேகம் எனக்கு இருந்தது. சிபிசிஐடி போலீசாரை அதற்காக இன்று சந்தித்தேன். எப்ஐஆர் நகல் எனக்கு வழங்கப்பட்டது. அதில் பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவுகள் அனைத்துமே, ஜாமினில் வெளிவரக்கூடிய பிரிவுகள் தான்.

என் வீட்டில் நடந்தது கலவரம். என் கதவு உடைக்கப்பட்டு, பொருட்கள் உடைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று செக்‌ஷன் போட்டிருந்தாலே, நீதித்துறை நடுவர், அவர்களுக்கு ஜாமின் வழங்கியிருக்க மாட்டார். ஆனால், வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக ஜாமினில் வெளிவர வேண்டும் என்பதற்காகவே, சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் பலவீனமாக பிரிவுகளை போட...