இந்தியா, ஜூன் 4 -- அண்ணா பல்கலைகழக வழக்கில், 60 நாட்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, சாட்சியங்கள், வாதங்களை தமிழ்நாடு அரசு சிறப்பாக எடுத்துரைத்ததன் மூலம் விரைவான தீர்ப்பு பெறப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதிலும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதிலும் திமுக அரசும் முதல்வரும் உறுதியாக உள்ளது என அமைச்சர் ரகுபதி கூறியிருந்தார்.

மேலும் படிக்க| 'இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல்!' ஈபிஎஸை விளாசும் ரகுபதி!

அத்தோடு, தமிழ்நாட்டு மாணவிகளை அச்சுறுத்தி அவர்களைக் கல்விநிலையங்களுக்குச் செல்ல விடாமல் அச்சுறுத்த வேண்டும் எனும் அற்பபுத்தியோடு 'யார் அந்தச் சார்?' என அருவருப்பு அரசியல் செய்த பழனிசாமியின் இழிவான அரசியல் அம்பலப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிப் பெற்று தருவதை விட இந்த நிகழ்வை வைத்து திமுகவின் மீது எப்...