இந்தியா, மே 19 -- ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கும் தெய்வசெயல் மீது தன்னை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாகக் கல்லூரி மாணவி ஒருவர் பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். தனது புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கத் தாமதிப்பதாகக் கூறி, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் அவர் புகார் அளித்து இருந்தார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் படிக்க:- தனக்குத்தானே பிரசவம் பார்த்து பிறந்த பச்சிளம் குழந்தையை புதைத்த விவகாரம்! நர்சிங் மாணவி, காதலன் கைது!

மாணவியின் இந்த புகார் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தளத்தில் ட்வீட் செ...