இந்தியா, மார்ச் 24 -- ஜாமீனை ரத்து செய்ய கோரி அமலாக்கத்ததுறை தொடர்ந்த வழக்கில் பதில் தர அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டவிரோத பண பரிவர்தனையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி சுமார் ஓராண்டிற்கும் மேலாக சிறையில் இருந்தார்.

ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்றும். சார்ட்சிகள் முறையாக விசாரிக்க முடியாது என்றும் அமலாக்கத்துறை வாதங...