இந்தியா, மார்ச் 17 -- 'அப்பாவு ஒரு தலைப்பட்சமாக நடக்கிறார், கிண்டலடிக்கிறார்' என்று சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமி புகார் கூறியுள்ளார். அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கும் அப்பாவுக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை நீக்கக்கோரும் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக இன்று காலை மார்ச் 17-ல் அறிவிக்கப்பட்டது.

சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டுவந்த இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைய 118 வாக்குகள் தேவைப்படுகிறது. தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டதால், சபாநாயகர் அப்பாவு வெளியேறிய நிலையில் துணைசபாநாயகர் பிச்சாண்டி அவையை வெளிநடத்துகிறார்.

தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க செங்கோட்டையன், ஓபிஎஸ் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ...