இந்தியா, மே 21 -- தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கான தனிப்பட்ட காட்சிகள் என பல உள்ளன. ஆனால் அதில் ஒரு சில கட்சிகள் மட்டுமே மைய அரசியலில் ஒரு குறிப்பிட்ட பங்கு வகித்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது. தருமபுரி, கடலூர் மற்றும் அங்கு அருகே உள்ள சில மாவட்டங்களில் பெரும்பான்மையாக வன்னியர் சமூக மக்கள் இருக்கின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சமூக மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது. நீண்ட ஆண்டுகளாக தேர்தலில் முக்கிய பங்காற்றியும் வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், கட்சியின் தற்போதைய தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. தற்போது அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று திண்டிவனம் தைலாபுரத...