இந்தியா, மே 24 -- தெலுங்கில் அதிக சம்பளம்கேட்டு, படக்குழு கண்டுகொள்ளாததால், தன் சம்பளத்தைப் பாதியாக குறைத்த நயன்தாரா பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.

தெலுங்கில் அடுத்த ஆண்டு வரும் சங்கராந்தி பண்டிகைக்கு(பொங்கல்), டோலிவுட்டில் மற்றொரு கிரேஸி காம்பினேஷன் உருவாகியிருக்கிறது.

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் இயக்குநர் அனில் ரவிபுடி ஆகியோர் இணைந்து, மெகா 157 என்ற படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் மே 23-ல் தொடங்கிவிட்டது. இருப்பினும், படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நயன்தாரா, மிகக் குறைந்த ஊதியத்தில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக OTT ப்ளே அறிக்கை தகவலைக் கூறியிருக்கிறது.

ஆரம்பத்தில், நடிகர் சிரஞ்சீவி தனது 157ஆவது படத்தில், நடிகை நயன்தாராவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து ஹீரோயினாக்க நினைத...