இந்தியா, ஜூன் 9 -- கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மைக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தராத திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்து உள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மைக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தராத திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் ஜூன் 11, 2025 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டு காலமாக திமுக அரசு மக்களை பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வருவதாகவும், வருங்கால சந்ததியினர் கல்வி பயில்வதற்குத் தேவையான வசதிகளைக்கூட செய்து தராமல் வஞ்சிப்பதாக...