இந்தியா, மே 8 -- ஆபரேஷன் சிந்தூரால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் தற்போது ஹமாஸ் பயங்கரவாத குழு பாணியில் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு மீது வானில் தோன்றிய காட்சி இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்த காட்சியைப் போன்றது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் ஹமாஸும் கடந்த மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சந்தித்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய எல்லையோர மாநிலங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய டிரோண்களை இந்தியா சுட்டு வீழ்த்தி வருகிறது. உச்சகட்ட பரபரப்பு நிலவிவரும் நிலையில், பாதுகாப்பு காரணம் கருதி தர்மசாலாவில் பஞ்சாப், டெல்லி இடையிலான ஐபிஎல் போட்டி பாத...