இந்தியா, ஜூன் 2 -- இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), தனது பெயரை பயன்படுத்தி ஷேர் மார்க்கெட் குறித்த ஆலோசனைகளை வழங்குவதாக கூறி, அங்கீகரிக்கப்படாத விளம்பரங்களை வெளியிடுவது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக வலைத்தளமான எக்ஸில் வெளியிடப்பட்ட விரிவான வீடியோவில், ஷேர் மார்க்கெட் குறித்த ஆலோசனைகளை வழங்குவதாக கூறி, மோசடி செய்பவர்கள் பல்வேறு ஆன்லைன் தளங்களில் செய்திகளை பகிர்ந்து வருவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

"சில அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) உடன் தொடர்புடையதாக கூறி, ஷேர் மார்க்கெட் குறித்த ஆலோசனைகள், முதலீட்டு ஆலோசனைகள் அல்லது சிறப்பு நிதித் தகவல்களை வழங்குவதாக கூறி, குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆன்லைன் சேனல்கள் மூலம், விளம்பர...