இந்தியா, மே 15 -- தமிழர்களின் காலக் கணக்கீட்டின்படி 12 மாதங்களில் இரண்டாவது மாதமாக வைகாசி மாதம் திகழ்ந்து விடுகின்றது. இந்த மாதம் விசாக நட்சத்திரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. விசாகம் என்றால் மலர்ச்சி என்று பொருளாகும். சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு செல்லும் காலத்தில் வைகாசி மாதம் தொடங்குகின்றது. இது இளவேனில் காலத்தில் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.

வளம் தரக்கூடிய வைகாசி மாதத்தை மாதவ மாதம் எனவும் வைகாசம் என்றும் போட்டு இருக்கின்றனர். வைகாசி மாதத்தின் முதல் தேதியில் கங்கை நதியில் நீராடினால் ஏழேழு ஜென்மங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது.

வைகாசி தான் சமஸ்கிருதத்தில் விசாகம் என அழைக்கப்படுகின்றது. இந்த மாதத்தில் புனித நதிகளில் நீராடி மகாவிஷ்ணுவை வழிபட்டு துளசி இலையால் அர்ச்சனை செய்து பூஜை செய்தால் நல...