இந்தியா, ஏப்ரல் 16 -- இதுகுறித்து அவர் ஹெச்டி தமிழுக்கு கொடுத்த பேட்டியில் கூறியிருப்பதாவது.

கடந்த காலங்களைவிட தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 முதல் 4 சென்டிகிரேடி வெப்பம் அதிகரித்துள்ளது. இதை குறிப்பிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம். வடமேற்கு திசையில் வரும் உலர் காற்றுதான் இந்த வெப்ப நிலை உயர்வுக்கு காரணம் என்று குறிப்பிடுகிறது. உண்மையில் இது மட்டும்தான் முக்கிய காரணமா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பதை நாம் ஆய்ந்து பார்க்கவேண்டும்.

அதற்கு வேறு காரணங்களும் உள்ளன. பருவ நிலை மாற்றம், வெப்பத்தீவு விளைவும் (கான்கிரீட் வீடுகளின் அளவு அதிகரித்து பசுமை பரப்பு குறைவதும் இதற்கான காரணமாகும்), பொதுவாக மேற்கு திசை காற்றில் ஏற்படும் மாற்றங்கள் (பாகிஸ்தானில் இருந்து வீசும் வெப்ப காற்றுகள் சென்னையை தாக்குவது), அதிகரிக்கும் ஈரப்பதம், கடல் காற்ற...