இந்தியா, மே 7 -- பள்ளி செல்லும் குழந்தைகள் நீண்ட நாள் விடுமுறையில் வீட்டில் இருக்கிறார்கள். இந்த விடுமுறையில் தான் அவர்களை பல இடங்களுக்கு சுற்றுலா கொண்டு செல்ல வேண்டும் என நினைப்பார்கள். அதேபோல நண்பர்களுடன் சேர்ந்து நீண்ட நேரம் விளையாட வேண்டும் எனவும் நினைத்து இருப்பார்கள். முக்கியமாக சுற்றுலா விடுமுறை சமயத்தில் வீட்டில் எப்போதும் சிற்றுண்டிகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் மிகவும் அதிகமாக சிற்றுண்டி சாப்பிட விரும்புவார்கள். இந்த நிலையில் நாம் அடிக்கடி கடைகளில் விற்கப்படும் உணவுகளை வாங்கி கொடுத்தால் அது அவர்களது உடலுக்கு சேராது. சில சமயங்களில் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதனை தவிர்க்க நாமே வீட்டில் செய்யக்கூடிய உணவு வகைகளை கொடுக்க வேண்டும் அவர்கள் விரும்பும் வகையான இனிப்பு உணவுகளை அதிகம் செய்து கொடுத்தால் மிகவும் ...