சிவகங்கை,காரைக்குடி,சிங்கம்புணரி, ஏப்ரல் 4 -- சிங்கம்புணரியில், காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவிகள் செயல் விளக்க முறையில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காளாப்பூரில் உள்ள விவசாயிகளை சந்தித்த கல்லூரி மாணவிகள், அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை கேட்டு அறிந்து அதை சரி செய்வதற்கான செயல்முறைகளை விளக்கினர். காளாப்பூரில் அதிகபட்சமாக நெல், தென்னை மற்றும் வாழையை விதைத்துள்ளனர். விவசாயிகள் சந்தித்த மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் தென்னை மரத்தை தாக்கும் வெள்ளை ஈக்களும், காண்டாமிருக வண்டு மற்றும் நெற்பயிர்களை தாக்கும் வெளிநாட்டு பறவைகள் (பெலிக்கான்) போன்றவை. இவற்றின் தாக்கத்தால் அப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்த ம...