இந்தியா, மே 2 -- உங்கள் தொப்புளில் விளக்கெண்ணெயை வைத்து மசாஜ் செய்யும்போது, அது உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. பிறக்கும்போது உங்கள் தாயுடன் ஒரு நல்ல தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்த இடம் தொப்புள் தான். இதில் விளக்கெண்ணெயை வைத்து மசாஜ் செய்யும்போது, அது மலச்சிக்கலைப் போக்குகிறது மற்றும் மாதவிடாய் வலியைக் குறைக்கிறது. உங்கள் தொப்புளை தண்ணீர் மற்றும் பஞ்சு வைத்து சுத்தம் செய்துவிட்டு, காய்ந்த துணியால் துடைத்துவிடவேண்டும். நேராகப் படுத்துக்கொண்டு, அது காய்ந்தவுடன் விளக்கெண்ணெய் தொப்புளில் வைத்து மசாஜ் செய்யவேண்டும். இதை 15 நிமிடங்கள் மசாஜ் செய்தால், உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதை இரவு உறங்கச் செல்லும் முன் செய்துவிட்டு, அப்படியே விட்டு விட்டால், உடல் இரவு முழுவதும் அதை உறிஞ்சிக்கொள்ளும். அதனா...