இந்தியா, மே 8 -- 12 ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: "12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி, புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள். வெற்றி காணுங்கள்.

வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும் நீங்கள், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து, தலைசிறந்து விளங்கிட வாழ்த்து...