இந்தியா, ஜூன் 24 -- அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் 2026க்கு தயாராகும் வகையில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். அதன் ஒரு பகுதியாக பூத் கமிட்டியை வலுப்படுத்தக்கூடிய பணிகளை அதிமுக தீவிரபடுத்தியுள்ளது .

மாவட்ட வாரியாக உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குச்சாவடி முகவர்களை அமைத்து அதற்கான பட்டியலை தலைமையிடம் சமர்ப்பிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

மேலும் படிக்க: முருகன் மாநாட்டில் அண்ணா குறித்து விமர்சனம்.. அதிமுக அடி...