இந்தியா, மே 21 -- கோயில் நகரமாக திகழ்ந்து வருவது காஞ்சிபுரம். இந்த மாநகரத்தில் சிறப்பு பெற்ற கோயிலாக அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் விளங்கி வருகிறது. பல வரலாற்று சிறப்புகளை இந்த திருக்கோயில் தன்வசம் தாங்கி வருகிறது.

பிரம்ம தேவர் மனம் தூய்மை கொள்வதற்காக காஞ்சிபுரம் சென்றார். அப்போது பிரம்மதேவர் தனது மனைவி சரஸ்வதியை விட்டுவிட்டு மற்ற மனைவிகளான காயத்ரி சாவித்திரி ஆகியோரை அழைத்துக் கொண்டு அந்த இடத்தில் யாகம் ஒன்றை செய்தார். இதனால் கோபமடைந்த சரஸ்வதி தேவி யாகத்தை அழிப்பதற்காக வேகவதி ஆறாக உருவெடுத்தார்.

மேலும் படிங்க| புதன் பகவானின் கோடீஸ்வர யோகத்தை பெறுகின்ற ராசிகள்

ஆறாக பாய்ந்தோடி வந்த சரஸ்வதி தேவியை கண்டு பிரம்மதேவன் பயந்து மகாவிஷ்ணுவிடம் வேண்டிக்கொண்டார். உடனே மகாவிஷ்ணு வெள்ளப்பெருக்கு வரும் வழியில் சயன கோலத்தில் படுத்து கிடந்தார்...