இந்தியா, மே 6 -- புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் இரு சமூகத்தினரிடையே நடந்த மோதல் தொடர்பாக ஒரே சமூகத்தை சேர்ந்த 11 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு, ஒரு வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே சமூகத்தைச் சேந்த 11 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலங்குடி வட்டாட்சியர் வில்லியம் மோசஸ் மற்றும் டிஎஸ்பி முத்துராஜா ஆகியோர் நிகழ்விடத்தை பார்வையிட்டு சேத விவரங்களை கணக்கெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க:- 'மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படும் மதுரை ஆதீனத்தை பதவிநீக்கம் செய்ய வேண்டும்...