இந்தியா, பிப்ரவரி 26 -- தனுஷ் இயக்கத்தில், அவரின் 3 வது திரைப்படமாக கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளியான படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்தப்படம் வெளியான அன்றைய தினம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான டிராகன் படமும் வெளியானது. இந்தப்படத்திற்கு வந்த பாசிட்டிவான விமர்சனங்கள், தனுஷின் படத்திற்கு பாதிப்பை உருவாக்கி விட்டதாக சொல்லப்படுகிறது.

டிராகன் திரைப்படம் உலகளவில் வசூலில் 100 கோடியை நெருங்கி வரும் நிலையில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் முதல் வாரத்தில் வெறும் 10 கோடியை மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய 2 நாட்களில் மொத்தமாக வெறும் 1 கோடியை மட்டுமே இந்தப்படம் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. படத்திற்கு ஓரளவு சுமாரான விமர்சனங்கள் வந்த நிலையிலும் கூட, படம் வசூலில் ...