சென்னை,மதுரை,கோவை,திருச்சி, ஏப்ரல் 17 -- வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-ன் அரசியல் சாசனப்பூர்வமான செல்லுபடியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்க, மத்திய அரசுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் வியாழக் கிழமையான இன்று உத்தரவிட்டது. விசாரணையின் போது, மத்திய அல்லது மாநில வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமியரல்லாதவர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு நீதிமன்றத்திடம் தெரிவித்தது.

மேலும் படிக்க | '150 ஆண்களுடன் தொடர்பில் உள்ளேன்..' ஓரினச் சேர்க்கையாளரின் சந்தேகம்.. பிரேமானந்த்ஜி மகாராஜ் சொன்ன தீர்வு!

அடுத்த விசாரணை தேதி வரை, அறிவிப்பு மூலம் அல்லது பயனாளரால் வக்ஃப் என பதிவு செய்யப்பட்ட வக்ஃப் சொத்துகள் எதுவும் நீக்கப்படாது அல்லது அவற்றின் தன்மை மாற்றப்படாது என்று மத்திய அரசு அளித்த உறுதியை உச்ச நீதிமன்றம் பதிவ...