இந்தியா, ஜூன் 10 -- இந்தியாவின் பணக்கார இயக்குநர் யார்? அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர் யார்? என்ற விவாதம் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. ஆனால், தற்போது இந்த கேள்விகளுக்கான பதில் கிடைத்திருக்கிறது. ஆம், அவர் வேறு யாருமில்லை இயக்குநர் ராஜமெளலிதான்.

நான் ஈ படத்தின் மூலம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ராஜமெளலி, பாகுபலி, ஆர்.ஆர். ஆர் ஆகிய திரைப்படங்களில் உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். இவருக்கு சல்மான் கான், ஷாருக்கான் போன்ற நடிகர்களை விட அதிக சம்பளம் கிடைக்கிறதாம்.

இப்போது உங்களுக்கு அவர் ஒரு படத்துக்கு எவ்வளவு வாங்குகிறார் என்ற கேள்வி வரும். ஐஎம்டிபி படி வெளியிட்ட தகவலின் படி, எஸ்.எஸ்.ராஜமௌலி அவர் இயக்கும் ஒவ்வொரு படத்திற்கும் சுமார் 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. இதில் அவரது முன்பணம், லாபப...