புதுச்சேரி,கருவடிக்குப்பம், ஏப்ரல் 27 -- புதுச்சேரியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் உமா சங்கர் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் எட்டு வழக்குகளில் வழிப்பறி, பாலியல் தொழில், கொலை, வழக்குகளில் தொடர்புடையவர் கருவடிக்குப்பம் சேர்ந்த உமாசங்கர். லாஸ்பேட்டை காவல் நிலையத்தின் ரெளடிகள் பட்டியலில் இருக்கும் இவர், புதுச்சேரி பா.ஜ.க-வின் மாநில இளைஞரணி துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவர் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக அவ்வப்போது தலைமுறைவாகவும் தமிழகத்தில் தஞ்சம் புகுந்து இருந்து வருகிறார்.

மேலும் படிக்க | 'பாமக இருக்கும் கூட்டணியில் இருக்கமாட்டோம்' திமுகவுக்கு நேரடி செய்தி அனுப்பிய திருமாவின் பேச்சு!

இந்த நிலையில் கடந்த...