இந்தியா, மே 8 -- பாகிஸ்தானின் லாகூரில் வியாழக்கிழமை காலை பயங்கர சத்தத்துடன் ஒரு வெடிப்பு சத்தம் கேட்டதாக உள்ளூர் ஒளிபரப்பாளரான ஜியோ டிவி மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய ஒரு நாள் கழித்து இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெடிப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

உள்ளூர் ஊடக செய்திகளின்படி, வெடிப்புக்குப் பிறகு சைரன்கள் ஒலித்தன, மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். வால்டன் விமான நிலையம் அருகே உள்ள கோபால் நகர் மற்றும் நாசீராபாத் பகுதிகளில் இந்த வெடிப்பு சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

கராச்சி, லாகூர் மற்றும் சியால்கோட் விமான நிலையங்களில் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள...