இந்தியா, ஏப்ரல் 25 -- கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது ரூபாய் 3 கோடி வரை சொத்து சேர்த்ததாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி, அவரது மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்தது. இந்த நிலையில் அவரது குடும்பம் மற்றும் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்டமனுவினை விசாரித்த கடலூர் நீதிமன்றம் எம் ஆர் கே பன்னீர்செல்வம் உட்பட மூன்று பேரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.

இவ்வாறு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க | வேளாண் பட்ஜெட் ...