இந்தியா, மே 29 -- தனது மகன் அன்புமணி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருந்த நிலையில், இளைஞர் அணி தலைவர் பதவியிலில் இருது முகுந்தன் பரசுராமன் விலகுவதாக அறிவித்து உள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) உட்கட்சி மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இளைஞர் அணி தலைவராக இருந்த முகுந்தன் பரசுராமன் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த விலகல், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவை மேலும் உறுதிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

முகுந்தனின் விலகல், பாமகவில் தந்தை-மகன் மோதலின் உச்சமாக பார்க்கப்படுகிறது. பாண்டிச்சேரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸ் தனது மகள்வழி பேரனான முகுந்தனை ...