இந்தியா, மே 17 -- இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்காக அமீர்கானுடன் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இணைந்திருப்பதாக கடந்த வியாழக்கிழமை அறிவிப்பு வெளியானது. ஆனால், கடந்த 2023ம் ஆண்டே ராஜமெளலி தாதாசாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தை அறிவித்ததாகவும், அதில் பிரபல நடிகர் ஜூனியர் என். டி.ஆர் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் உலா வந்தன.

இந்த நிலையில் அமர் உஜாலாவுடனான ஒரு நேர்காணலில், பால்கேவின் பேரன் சந்திரசேகர் ஸ்ரீகிருஷ்ணா புசல்கர் ராஜமௌலி மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இது குறித்து அவர் பேசும் போது "ராஜமௌலியின் படம் குறித்த விவாதங்களை நான் கேட்டு வருகிறேன்; ஆனால் அதற்காக அவர் என்னை ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை. ராஜமௌலி சார...