இந்தியா, மே 18 -- இதுகுறித்து, மருத்துவர் புகழேந்தி கூறியிருப்பதாவது:

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 294 மில்லியன் மக்கள் ரத்தக்கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 220 மில்லியன் பேர் ரத்தக்கொதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025ம் ஆண்டுக்குள் ரத்தக்கொதிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை 25 சதவீதம் குறைக்க இந்தியா உறுதிபூண்டாலும், அது சாத்தியம் தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரத்தக்கொதிப்பிற்கு காரணமாக புகைத்தல், ஆல்கஹால் பயன்பாடு, அதிக உப்பு உட்கொள்வது (ஒரு நாளுக்கு உப்பின் பயன்பாடு, 3 முதல் 5 கிராம் என மட்டுமே இருக்க வேண்டும்), உடலுழைப்பு குறைவு, உணவு முறையில் மாற்றம் (அதிக கொழுப்பு, அதி தீவிர மாறுதல் செய்யப்பட்ட உணவு (Ultra-Processed foods), துரித உணவு, மன அழுத்தம், பரம்பரை நோய் (குடும்பத்தில் முன்னோர்களுக்கு இருந்திர...