இந்தியா, மே 25 -- தமிழ்நாட்டை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் மீதான தீர்ப்பு மே 28ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க:- "தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது" வானிலை மைய இயக்குநர் அமுதா அறிவிப்பு

2024 டிசம்பர் 23 அன்று இரவு 8 மணியளவில், அண்ணா பல்கலைக்கழகத்தின் உள் செயல்பட்டு வரும் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் கட்டிடம் ஒன்றின் பின்புறம் பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், பின்னர் மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்க...