இந்தியா, மே 9 -- காஞ்சிபுரம் மாநகரம் கோயில் நகரமாக கருதப்படுகிறது. சிவபெருமான் பெருமாள் கோயில்கள் என மாநகரம் முழுவதும் கோயில்கள் நிறைந்து காணப்படுகின்றன. திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்ந்து வருகிறது.

வைணவ பாரம்பரியத்தில் இருக்கக்கூடிய திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய கோயில்களுக்கு அடுத்ததாக மிகவும் சிறப்பு வாய்ந்த திருக்கோயிலாக காஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயில் திகழ்ந்து வருகின்றது.

மேலும் படிங்க| குரு பகவானின் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள்

இந்த திருக்கோயில் யாரால் முதலில் நிறுவப்பட்டது என்பது இன்றுவரை தெரியாமல் இருந்து வருகிறது. 153 ஆம் ஆண்டு சோழர்களால் வேழமலையில் குகைவரை கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்க பெற்றுள்ளதாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

முதலாம் குலோ...