இந்தியா, ஜூன் 18 -- ஜி7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியும், கனடா பிரதமர் மார்க் கார்னியும் சந்தித்து பேசியது, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையேயான உறவில் ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் நட்பை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் அருமையான சந்திப்பு இருந்தது. ஜி 7 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள கனடா அரசுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவும் கனடாவும் ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் அடிப்படையில் வலிமையாக இணைந்துள்ளன. பிரதமர் கார்னியும், நானும் இணைந்து இந்தியா-கனடாவுக்கு இடையேயான நட்புறவுக்கு வலிமை சேர்ப்போம்." எனப் பதிவிட்டுள்ளார்...