இந்தியா, மே 8 -- மோகினி ஏகாதசி என்பது இந்து சமயத்தில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மோகினி ஏகாதசி இன்று (மே 8) ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையின் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக இன்று பக்தர்கள் மகா விஷ்ணுவை வழிபடுகின்றனர். இந்த நாளில் மகா விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து தீய சக்திகளை அழித்தார் என்பது நம்பிக்கை. அன்று முதல் இந்நாள் மோகினி ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது.

மோகினி ஏகாதசி அன்று, நீங்கள் சில தவறுகள் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், மோகினி ஏகாதசி அன்று என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது, என்ன மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

மோகினி ஏகாதசி அன்று விரதம் இருந்தால் நிறைய புண்ணியம் கிடைக்கும். அனைத்து பிரச்னைகளும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடியும். இன்று விரத...