இந்தியா, ஏப்ரல் 10 -- லாஸ் ஏஞ்சல்ஸ் எஃப்சிக்கு எதிரான 'கான்காகாஃப்' சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இன்டர் மியாமி 3 கோல்களைப் பதிவு செய்து வெற்றி கண்டது. இன்டர் மியாமி அணியின் வீரர் மெஸ்ஸி அசத்தலாக 2 கோல்களை தனது அணிக்காக அடித்து வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் அணிக்காக ஆரோன் ஒரே ஒரு கோலை மட்டுமே பதிவு செய்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் அணிதான் முதல் கோலைப் பதிவு செய்தது. அந்த கோல் ஆரோனிடம் இருந்து 9வது நிமிடத்தில் வந்தது. ஆனால், அதன்பிறகு ஒரு கோலைக் கூட அந்த அணியால் அடிக்க முடியவில்லை. 35 மற்றும் 84வது நிமிடங்களில் லியாேனல் மெஸ்ஸி கோல் பதிவு செய்தார். ரெடோண்டோ 61வது நிமிடத்தில் ஒரு கோலைப் போட்டார். இதன்மூலம், இந்தப் போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்தது இன்டர் மியாமி. இன்றைய மேட்ச்சில் மெஸ்ஸி அசத்தியிருக்கிறார்.

மேலும்...