இந்தியா, மார்ச் 7 -- மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக நடத்தி வரும் கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.விஜயகுமாரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு.K.S.விஜயகுமார், Ex. M.L.A., (மாவட்ட புரட்ச...