இந்தியா, மே 27 -- நடிகர் உன்னி முகுந்தன் தவறான வார்த்தைகளில் தன்னைப் பேசி தாக்கியதாக அவரின் முன்னாள் மேலாளர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

இது குறித்து மாத்ருபூமி இணையதளம் அளித்த தகவலின் படி, உன்னி முகுந்தனின் முன்னாள் மேலாளர் விபின் குமார் மருத்துமனையில் காயங்களுக்கு சிகிச்சைப்பெற்று, கொச்சியில் உள்ள இன்ஃபோபார்க் காவல் நிலையத்தில் முகுந்தன் மீதான புகாரை கொடுத்திருக்கிறார்.

மேலும் படிக்க | ஜிவி பிரகாஷ் மாற்றிய பெயர்.. உச்சம் தொட்ட கெரியர்.. பாடகர் கிரிஷ் பகிரும் உண்மைகள்..

காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்படி, முகுந்தன் தன்னை தாக்கியதாகவும், தனக்கு எதிராக தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் விபின் குறிப்பிட்டதாக தெரிகிறது. மேலும் அதற்காக எடுத்துக்கொண்ட சிகிச்சைக்கான ஆதாரங்களையும் அவர் போலீசில் காண்பித்தார்...