இந்தியா, மே 31 -- முதலமைச்சரின் மதுரை வருகையையொட்டி பந்தல்குடி கால்வாயை திரைக்கட்டி மறைத்த சம்பவத்திற்கு செல்லூர் ராஜூ கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வருகை தரவுள்ள நிலையில், அவர் பயணிக்கும் வழியில் உள்ள பந்தல்குடி கால்வாய் பகுதியை அதிகாரிகள் சாமியானா மற்றும் துணி வைத்து மறைத்தது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாலை 4 மணி முதல் ஜெயந்துபுரம், ஜீவா நகர், டி.வி.எஸ். நகர், காலவாசல், ஆரப்பாளையம் ஆகிய பகுதிகளைக் கடந்து முதலமைச்சர் சர்க்யூட் ஹவுஸ் செல்லும் பாதையில், சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்வாயை மறைக்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மறைப்பு முயற்சி, கால்வாயின் அவலநிலையை முதலமைச்சரின் கவனத்திற்கு வராமல் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டுகி...