இந்தியா, ஏப்ரல் 12 -- நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். அசுரர்களின் குருவாக சுக்கிரன் திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவானின் ஆசி இருந்தால் ஒருவர் வாழ்க்கையில் உச்சத்தை அடையலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். கடந்த மார்ச் 31ம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே இந்த ராசிகள் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி வரை இதே ராசியில் சுக்கிரன் பயணம் செய்வார்.

சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத...