இந்தியா, மார்ச் 6 -- சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகின்றது. மேலும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை விநியோகம் செய்யும் மதுபான ஆலைகளின் தலைமை அலுவலகங்களிலும் இந்த சோதனை நீண்டு உள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இந்த சோதனை நடந்து வருகின்றது. இதற்காக சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் குடும்பத்திற்கு தொடர்புடைய அக்கார்ட் டிஸ்லரிஸ் அண்ட் பிவெரெஜஸ் பிரைவெட் லிமிடெட், எஸ்.என்.ஜே குழுமம், கால்ஸ் குழுமம் ஆகிய மதுபான ஆலைகளின் தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மது ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களின் எண்ண...