இந்தியா, மார்ச் 9 -- பெண்களின் இறப்பை தடுக்கும் முக்கியமான காரணி என்னவென்று பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இந்த உலக மகளிர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் நாம் இருக்கிறோம். இந்தியாவிலேயே அதிகளவில் மார்பகப் புற்றுநோய் சென்னையில்தான் அதிகம் உள்ளது. இது 32.5 சதவீதம் உள்ளது. 19 பெண்களில் ஒருவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். ஒரு லட்சம் பெண்களில் 52 பேருக்கு மார்பகப் புற்றுநோய் சென்னையில் ஏற்படுகிறது. எனவே கட்டாயம் இதுகுறித்து நாம் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு மக்கள் மற்றும் அரசு இரு தரப்பு முன்னெடுப்புகளும் இருக்கவேண்டும். தமிழக அளவில் இறப்பு குறித்த சரியான புள்ளிவிவரங்கள் இல்லையென்றாலும், இந்தியாவிலேயே மார்பக புற்றுநோய் பாதிப்பு சென்னையில்தான் அதிகம் உள்ளது. நகர்புறத்தைவிட கிராமப்புறங்களில் அது குறைவாக உள்ளது. ...