இந்தியா, மே 17 -- கெட்டியான தயிரில் இருந்து தயாரிக்கப்படும் ரெசிபிதான் லஸ்ஸி. இந்த கோடையை குளிர்விக்க நீங்கள் பருகும் பானங்களுள் ஒன்று. லஸ்ஸியில் ஸ்பெஷல் என்றால், அது பஞ்சாபி லஸ்ஸிதான். அதில் மாம்பழம் சேர்த்து செய்யும்போது அதிக சுவையைத் தரும். மேலும் உங்கள் நாவுக்கும் விருந்தாகும். அதிக சுவை கொண்ட இந்த மாம்பழ லஸ்ஸியை செய்வது எப்படி என்று பாருங்கள். இதை நீங்கள் வீட்டிலேயே செய்ய முடியும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் செய்தால், அது இன்னும் கூடுதல் சுவையானதாகவும் இருக்கும். இந்த லஸ்ஸியை ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள் அத்தனை சுவையானதாகும். இதோ ரெசிபி.

* மாம்பழங்கள் - 2

* தயிர் - ஒரு கப்

* பால் - அரை கப் (காய்ச்சி ஆறி ஃபிரிட்ஜில் வைத்து குளிர எடுத்துக்கொள்ளவேண்டும்)

* சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்

* ஏலக்காய்ப் பொ...