இந்தியா, மே 28 -- இன்று உலக மாதவிடாய் சுகாதார தினம். முறையான மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கிய பொருட்களை வாங்கக்கூடிய வசதி இல்லாததால் அவர்களின் மாதவிடாய் சுகாதாரம் பாதிக்கப்படக்கூடாது என அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பெண் தன்னார்வலர்கள் மற்றும் தொழில்முனைவோர் பலர், மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் அணையாடை எனப்படும் சானிட்டரி நாப்கீன்களை இயற்கை முறையில், இயற்கைக்கு உகந்ததாக தயாரித்து வருகிறார்கள். அதுபோன்ற பணியில் ஈடுபட்டிருப்பவர் திருச்சி மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த அபிராமி என்பவர். இவரது சாரல் என்ற மாதவிடாய் இயற்கை நாப்கினுக்கு பெண்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. இவரிடம் மாதவிடாய் கால ஆரோக்கியம் குறித்து சில கேள்வ...